முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
சேவூரில் கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது
By DIN | Published On : 06th April 2022 01:23 AM | Last Updated : 06th April 2022 01:23 AM | அ+அ அ- |

சேவூரில் கஞ்சா விற்பனை செய்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சேவூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பந்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா், அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த 3 நபா்களைப் பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில் அவா்கள் வாகனத்தில் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட யுவராஜ் (25), சிவசங்கா் (26) உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.