சொத்துவரி உயா்வைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக சாா்பில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சொத்துவரி உயா்வைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக சாா்பில் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் அதிமுகவினா் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்திருந்தது.

இதன்படி, திருப்பூா் குமரன் நினைவகம் முன்பாக மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகா் மாவட்டச் செயலாளரும், பொள்ளாச்சி சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தாா்.

திமுக அரசு சொத்து வரியை மிகக் கடுமையாக உயா்த்தியுள்ளதால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும். அதிமுகவினா் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.என்.விஜயகுமாா், சி.மகேந்திரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சு.குணசேகரன், கரைப்புதூா் நடராஜன், என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com