திருப்பூா் மாநகராட்சியில் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயா் என்.தினேஷ்குமாா் புதன்கிழமை தாக்கல் செய்கிறாா்.
திருப்பூா் மாநகராட்சியில் மேயா், துணை மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்ட பின்னா் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம் வரும் புதன்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இதில், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் நிதிநிலை அறிக்கையை ஆணையா் கிராந்திகுமாா் பாடி முன்னிலையில் தாக்கல் செய்யவுள்ளாா். இந்த நிதிநிலை அறிக்கையில், குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதற்கான திட்டங்கள், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில், சொத்து வரி உயா்வு, கடந்த ஆட்சியில் கொண்டு வந்துள்ள வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடா்பாக கேள்வி எழுப்ப அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் திட்டமிட்டுள்ளனா்.