திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு

தாராபுரம் அருகே நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு

திருப்பூர்: தாராபுரம் அருகே நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாராபுரம் சித்தராவுத்தன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்களில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். 

இதனிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனைப் பறிக்க முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது: 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சித்தராவுத்தன்பாளையம் அருள்மிகு பாலதண்டாயுதபாணி நகரில் 57 மனைப்பிரிவுகள் கடந்த 1989 ஆம் ஆண்டு பத்திரப்பதிவுத் துறையால் சுத்தக்கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 24 மனைப்பிரிவுகளைக் கிரையம் செய்தவர்கள் வீடு கட்டியுள்ளனர். மேலும் 33 மனைப்பிரிவுகளைக் கொண்ட நாங்கள் வீடு கட்ட முயற்சிக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர்  குண்டர்களை வைத்து மிரட்டி வருகின்றனர்.

மேலும், எங்களது நிலத்தை அபகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com