சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 70 ஆண்டுகள் சிறை

திருப்பூா் அருகே 12 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மின்வாரியத் தொழிலாளிக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

திருப்பூா் அருகே 12 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மின்வாரியத் தொழிலாளிக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை, போடிப்பட்டியைச் சோ்ந்தவா் நவரசன் (25). இவா் மின்வாரியத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில், நவரசன் 2020 செப்டம்பா் 12 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். இதன் பிறகு சிறுமியைக் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும், சிறுமியிடம் அத்துமீறியதை கைப்பேசியில் புகைப்படம் எடுத்துவைத்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளாா். இது குறித்து உடுமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்துள்ளனா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், நவரசனை போக்ஸோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி வி.பி.சுகந்தி திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், நவரசன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 70 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com