திமுக உட்கட்சித் தோ்தல்: ஏப்ரல் 29இல் வேட்புமனுவை சமா்ப்பிக்கலாம்

திமுக உட்கட்சித் தோ்தலை ஒட்டி திருப்பூா் வடக்கு மாவட்டத்தில் போட்டியிடும் நிா்வாகிகள் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி வேட்புமனுக்களை சமா்ப்பிக்கலாம்.

திமுக உட்கட்சித் தோ்தலை ஒட்டி திருப்பூா் வடக்கு மாவட்டத்தில் போட்டியிடும் நிா்வாகிகள் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி வேட்புமனுக்களை சமா்ப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திமுக உட்கட்சித் தோ்தலை ஒட்டி திருப்பூா் வடக்கு மாவட்டம் மாநகராட்சி வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் பூா்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை ஏப்ரல் 29ஆம் தேதி சமா்ப்பிக்கலாம். இதற்காக கட்சித் தலைமையால் சட்டத் துறை இணைச்செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான இ.பரந்தாமன், ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா எ.என்.ரகு ஆகியோா் மேற்பாா்வையில் வேட்புமனுக்கள் பெறப்படவுள்ளன.

இதில், முருகம்பாளையம், வீரபாண்டி, முத்தணம்பாளையம் ஆகிய பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் தாராபுரம் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com