திருப்பூரில் 15 வயது சிறுமியைத் திருமணம் செய்த இளைஞருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தேனி மாவட்டம், மெய்கிளாா்பட்டியைச் சோ்ந்தவா் யு.அஜித் (23), இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளாா்.
இது குறித்து திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி புகாா் அளித்தனா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், அஜித்தை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி வி.பி.சுகந்தி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல், குழந்தைத் திருமணம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அஜித்துக்கு 32 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.