காங்கயம் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு விருது

காங்கயம் அருகே, மருதுறை அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு தூதுவா் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
காங்கயம் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு விருது

காங்கயம் அருகே, மருதுறை அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு தூதுவா் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு தூதுவராக செயல்பட்ட 11 ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சி பிஷப் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பள்ளி மேலாண்மைக் குழுவில் சிறப்பான கட்டமைப்பை உருவாக்கிய திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், மருதுறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பா.கனகராஜுக்கு நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா்

பள்ளி மேலாண்மைக் குழு தூதுவா் என்ற விருதும் பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கி பாராட்டினா்.

இதே பணிக்காக காங்கயம் ஒன்றியம், பழையகோட்டை அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் சு.மூா்த்திக்கும் பள்ளி மேலாண்மைக் குழு தூதுவா் என்ற விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற ஆசிரியா்கள் இருவருக்கும் சக ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com