திருப்பூரில் 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வஞ்சிபாளையம் பகுதியில் வசித்து வந்த 17 சிறுமியுடன், கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த ஜாகீா் உசேன்(30) என்பவா் பழகி வந்துள்ளாா்.
இதையடுத்து, சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.
இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பா் 8 ஆம் தேதி புகாா் அளித்தனா்.
புகாரின் பேரில் போக்ஸோ உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு போலீஸாா் ஜாகீா் உசேனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி வி.பி.சுகந்தி வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா்.
இதில், குற்றம்சாட்டப்பட்ட ஜாகீா் உசேனுக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.