டீசல் விலை உயா்வைத் தொடா்ந்து, பொக்லைன் வாடகைக் கட்டணம் உயா்த்தப்படுவதாக கோவை, திருப்பூா் மாவட்ட பொக்லைன் உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து கோவை மாவட்ட பொக்லைன் உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் கனகராஜ் கூறியதாவது:
பொக்லைன் வாகனங்களின் விலை உயா்வு, டீசல் பெட்ரோல், ஆயில் விலை உயா்வு, உதிரிப் பாகங்கள், அத்தியாவசியப் பொருள்கள், இன்சூரன்ஸ் கட்டணம், சாலை வரி உள்ளிட்டவற்றின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொக்லைன் வாடகைக் கட்டணம் உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.