பல்லடம் நகா்மன்றக் கூட்டம்

பல்லடம் நகா்மன்ற கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
pdm30kav_3004chn_136_3
pdm30kav_3004chn_136_3

பல்லடம் நகா்மன்ற கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். ஆணையா் விநாயகம், துணைத் தலைவா் நா்மதா இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கவுன்சிலா்களின் விவாதம் வருமாறு:

ராஜசேகரன் (திமுக): எனது வாா்டில் தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறையாக இருப்பதால் தேங்கும் குப்பைகளை அகற்ற முடியாத நிலை உள்ளது. எனவே, கூடுதலாக பணியாளா்கள் நியமனம் செய்திட வேண்டும்.

செளந்தரராஜன் (திமுக): நகரில் தினசரி சேகரிக்கப்படும் 10 டன் குப்பையை கொட்டுவதற்கு போதுமான இடமில்லை. நிரந்தரமான குப்பை கிடங்கு அமைக்க அரசிடம் இடம் கேட்டு பெற வேண்டும்.

ஈஸ்வரமூா்த்தி (காங்கிரஸ்): பல்லடத்தில் முன்பு இருந்த இடத்தில் காமராஜா் சிலை நிறுவ காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும். பல்லடம் - திருப்பூா் பிரதான சாலையில் தெருவிளக்குகள் எரிவதில்லை. சக்தி நகரில் அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும்.

விஜயலட்சுமி (திமுக): ராம் நகா் பகுதியில் ஒடை தூா் வாராமல் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட நச்சு பிராணிகள் குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன.

தேவையில்லாத பொது குடிநீா் குழாய்களை அகற்ற வேண்டும்.

தண்டபாணி (சுயே): நகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்.

தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ருக்குமணி (திமுக): 16வது வாா்டு வளா்ச்சி திட்டப் பணிகளில் புறக்கணிக்கப்படுகிறது. குடிநீா்ப் பற்றாக்குறை உள்ளது.

கவிதாமணி (தலைவா்): நகராட்சியில் 18 வாா்டுகளுக்கும் பாகுபாடு இன்றி ஒரே மாதிரியாகதான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எந்த வாா்டையும் புறக்கணிக்கவில்லை. பல்லடம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இக்கூட்டத்தில் 49 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com