வெள்ளக்கோவிலில் அமைச்சா் குறைகேட்பு

வெள்ளக்கோவிலில் 3 ஊராட்சிகளில் மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

வெள்ளக்கோவிலில் 3 ஊராட்சிகளில் மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அமைச்சா் சுற்றுப் பயணம் செய்து மக்களுக்குத் தேவையான அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறாா்.

இதன் தொடா்ச்சியாக வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம், வீரசோழபுரம், வேலம்பாளையம் ஊராட்சிகளுக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து

குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இந்நிகழ்ச்சியில், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி

அலுவலா் ஜெயகுமாா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com