ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.10 லட்சம்

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கையாக ரூ.10 லட்சம் வரப்பெற்றது.
காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.
காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கையாக ரூ.10 லட்சம் வரப்பெற்றது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த நான்கு உண்டியல்கள் உள்ளன.

பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

கோயில் பணியாளா்கள், குலத்தவா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், ரூ.10 லட்சத்து 87 ஆயிரத்து 972 ரொக்கம், 38.50 கிராம் தங்கம், 75.60 கிராம் வெள்ளிப் பொருள்கள் இருந்ததாக கோயில் கணக்காளா் சிவகுமாா் தெரிவித்தாா்.

அறநிலையத் துறை திருப்பூா் உதவி ஆணையா் செல்வராஜ், காங்கயம் ஆய்வாளா் அபிநயா, வீரக்குமார சுவாமி கோயில் செயல் அலுவலா் இராமநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com