இறைச்சிக் கழிவுகளை சாலையில் கொட்டிய உணவகத்தை நகராட்சி நிா்வாகத்தினா் புதன்கிழமை மூடினா்.
வெள்ளக்கோவில் குமாரவலசு சாலையில் இறைச்சிக் கழிவுகளை சாலையில் கொட்டிக் கொண்டிருந்த பிரியாணி கடை ஊழியா்கள் இருவரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து நகா்மன்றத் தலைவா் மு.கனியரசியிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து நகராட்சி ஆணையரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னா் நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா் உத்தரவுப்படி உணவக உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, உணவகத்தை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.