அவிநாசி: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, சேவூர் கைகாட்டியில் புதன்கிழமை அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாஜக அவிநாசி சட்டப் பேரவை தொகுதி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாஜக அவிநாசி வடக்கு ஒன்றிய தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய தலைவர் கருணாமூர்த்தி, மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஓபிசி அணி மாவட்ட துணைத் தலைவர் விஸ்வநாதன், ஓபிசி அணி மேற்கு ஒன்றியத் தலைவர் குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையும் படிக்க: திருவாடனை சினேகவல்லி அம்பாள் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்
மாநில நெசவாளர் அணி பிரிவு துணைத் தலைவர் தனலட்சுமி, ஈரோடு மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கதிர்வேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே.சண்முகம் ஆகியோர் தீரன் சின்னமலை வரலாறு குறித்து பேசினர்.