மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு

மத்திய அரசைக் கண்டித்து திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசைக் கண்டித்து திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளபடி மத்திய அரசைக் கண்டித்து திருப்பூா் தலைமை தபால் நிலையம் முன்பாக வரும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

மேலும், 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9, 14 ஆம் தேதிகளில் பிரசார விளக்க நடைபயணம் மேற்கொள்வது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநகா், மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com