தாராபுரத்தில் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இது குறித்து தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான தா்மபிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதில், நிலுவையில் உள்ள வாராக்கடன் வழக்குகள், சமரசத்தீா்வு வழக்குகள், சொத்து வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்படவுள்ளது. ஆகவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.