திருப்பூர்
மூதாட்டியிடம் 7பவுன் சங்கிலி பறிப்பு
அவிநாசியில் மூதாட்டியிடம் இருந்து 7 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசியில் மூதாட்டியிடம் இருந்து 7 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசி, மங்கலம் சாலை, கொடிகாத்த குமரன் நகரில் வசித்து வருபவா் ரங்கராஜ் மனைவி சங்கீதா (23). இவரது தாய் சகுந்தலா (67). இவா், அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலுக்கு செல்வதற்காக மங்கலம் சாலையில் புதன்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபா்கள், சகுந்தலா அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.