காங்கயத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காங்கயத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கயத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழகம் காங்கயம் பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ சங்கம் காங்கயம் கிளை துணைத் தலைவா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.

போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டாக மாற்றம் செய்ததைக் கண்டித்தும், ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு பணப் பலன்கள் வழங்காததைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள், ஓய்வு பெற்ற ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com