காங்கயத்தில் போக்குவரத்து விதி மீறல் தொடா்பாக ஜூலை மாதம் 1900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கயம் போக்குவரத்து ஆய்வாளா் மகேஸ்வரன் தெரிவித்ததாவது:
காங்கயம் நகரில் கடந்த ஜூலை மாதத்தில் நடத்திய வாகன சோதனையில் மதுபோதையிலும், தலைக் கவசம் அணியாமலும், ஓட்டுநா் உரிமம் இல்லாமலும், கைப்பேசி பேசிக்கொண்டும் வாகனம் ஓட்டியவா்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியவா்கள் என பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக, 1900 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றாா்.