பல்லடம் அருகே கல் குவாரியை மூடக்கோரி விவசாயி உண்ணாவிரதம்

திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே கல் குவாரியை மூடக்கோரி விவசாயி ஒருவா் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளாா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாா்.

திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே கல் குவாரியை மூடக்கோரி விவசாயி ஒருவா் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி விஜயகுமாா், தன்னுடைய கந்தையக்காட்டு தோட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளாா். இது குறித்து அவா் கூறியதாவது:

எனது தோட்டத்துக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான ஒரு கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியானது கனிம வளத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வருகிறது. இது தொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்து, குவாரியை மூடும் வரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com