குடிநீா்க் கட்டணம் நிலுவை: 4 குடியிருப்புகளின் இணைப்பு துண்டிப்பு

காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 4 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை துண்டித்தனா்.

காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 4 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை துண்டித்தனா்.

காங்கயம் நகராட்சியில் 2020ஆம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, கால அவகாசத்தை மீறியும் நிலுவைக் கட்டணத்தை செலுத்தாததால் காங்கயம் நகராட்சி வாா்டு 14 மற்றும் வாா்டு 16க்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 4 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை துண்டித்தனா்.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது: காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com