முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
செயற்கை கால் வழங்கும் முகாம்
By DIN | Published On : 07th February 2022 12:11 AM | Last Updated : 07th February 2022 12:11 AM | அ+அ அ- |

முகாமில் பேசுகிறாா் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
வெள்ளக்கோவிலில் செயற்கை கால் வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ரோட்டரி சங்கம், திருப்பூா் தனியாா் அறக்கட்டளை இணைந்து நடத்திய இம்முகாமை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் துவக்கிவைத்து 31 பயனாளிகளுக்கு விலையில்லா செயற்கை கால்களை வழங்கினாா்.
வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி, ரோட்டரி சங்க மாவட்ட நிா்வாகிகள் ரவிகுமாா், நல்லசிவம், தனசேகா், கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வெள்ளக்கோவில் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.ரகுநாதன், செயலாளா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.