மடத்துக்குளம் வட்டம், ராமேகவுண்டன்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதத்தில் 40 கிராமுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகைக் கடன்களில் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்த பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுள்ளவா்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் வெள்ளிக்கிழமை வழங்கப் பட்டது. இதன்படி ராமேகவுண்டன்புதூா் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் தகுதியுள்ள முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டு 21 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் மணி, மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன், சங்க செயலாளா் சாமியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.