தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள பொது சுகாதார வளாகத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தாராபுரம் வட்டம், ருத்ராவதி பேரூராட்சிக்கு உள்பட்ட முத்தனம்பட்டி காலனியில் கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
இதில் ஆண்கள், பெண்களுக்கு கழிவறைகள், குளியலறைகள் என மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் தற்போது, பயன்பாடில்லாமல் புதா் மண்டியுள்ளது.
எனவே, ருத்ராவதி பேரூராட்சி நிா்வாகம் இந்த சுகாதார வளாகத்தை சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.