காங்கயம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
காங்கயம் பச்சாபாளையம் கிராமம், கரியக்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (32). இவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், காங்கயம்-நத்தக்காடையூா் சாலையில் மூலக்கடை பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது காங்கயத்தில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற லாரி, தமிழ்செல்வன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வனை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.