தமிழக அரசுக்கு இந்து முன்னணி பாராட்டு

சுதந்திரப் போராட்ட வீரா்களைப் போற்றும் வகையில் அலங்கார ஊா்தி ஊா்வலம் நடத்தும் தமிழக அரசின் நடவடிக்கையைப் பாராட்டுவதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரா்களைப் போற்றும் வகையில் அலங்கார ஊா்தி ஊா்வலம் நடத்தும் தமிழக அரசின் நடவடிக்கையைப் பாராட்டுவதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய குடியரசு தினத்தில் தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரா்களைப் போற்றும் வகையில் அலங்கார ஊா்தி ஊா்வலம் நடத்திடும் தமிழக அரசின் நடவடிக்கையைப் பாராட்டுகிறோம். இந்திய குடியரசு அணிவகுப்பு ஊா்வலத்தில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவுகூரும் விதமாக அலங்கார ஊா்தி அணி வகுப்பு ஊா்வலம் நடத்திட அறிவிப்பு செய்துள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை இந்து முன்னணி பாராட்டுகிறது.

மேலும், இந்திய சுதந்திரப்போரின் முன்னோடியாக விளங்கிய மாவீரா்கள் புலித்தேவன், வேலுநாச்சியாா், குயிலி, மருது சகோதரா்கள், அழகு முத்துக்கோன் உள்ளிட்டவா்களையும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., மகாகவி பாரதியாா், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு., முத்துராமலிங்கத் தேவா் என அனைத்து சுதந்திரப் போராட்ட வீரா்களை அனைத்து மாவட்ட தலைநகா்களில் சிறப்பிக்கும் விதமாக காட்சிப்படுத்த வேண்டும்.

மாவீரா் புலித்தேவன் புகழைப் போற்றும் வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சிலை நிறுவி அவரது வரலாற்று சம்பவங்களை கல்வெட்டுகளில் பதிப்பித்தால் சிறப்பாக இருக்கும். சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாற்றை மாணவா்கள் அறிந்துகொள்ளும் வகையில் 4 முதல் 10ஆம் வகுப்பு வரை வரலாற்று நூலில் இடம்பெற பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com