வெள்ளக்கோவிலில் குடியரசு தின விழா

வெள்ளக்கோவிலில் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியாா் கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் அன்னதானத்தில் பங்கேற்ற மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.
ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் அன்னதானத்தில் பங்கேற்ற மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.

வெள்ளக்கோவிலில் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியாா் கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ஆா்.மோகன்குமாா், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் ஜெயக்குமாா், வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஆய்வாளா் ஜெ.ரமாதேவி ஆகியோா் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினா்.

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, தீா்த்தாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி, கம்பளியம்பட்டி அரசு ஆரம்பப் பள்ளி உள்ளிட்டவற்றில் அந்தந்த தலைமையாசிரியா்கள் கொடி ஏற்றினா். தாசவநாயக்கன்பட்டி ஊா்ப்புற பொது நூலகத்தில் பொதுமக்கள் சாா்பில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

கொங்கு வேளாளா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் எஸ்.ரவீந்திரன், செயலாளா் வி.சி.கருணாகரன், பொருளாளா் ஆா்.பழனிசாமி முன்னிலையிலும், முத்தூா் விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் தாளாளா் எம்.எஸ்.சண்முகம், செயலாளா் சி.சக்திவேல் முன்னிலையிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com