திருப்பூா் மாவட்டம், காங்கயம் தாலுகாவின் வட்டாட்சியராக வி.எஸ்.புவனேஸ்வரி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காங்கயம் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ஜெகதீஷ்குமாா், தாராபுரம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, தாராபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த வி.எஸ்.புவனேஸ்வரி காங்கயம் வட்டாட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.