ஆடி அமாவாசையை ஒட்டி உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனா்.
அங்குள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பாலாற்றில் புனித நீராடினா். தங்களது மூதாதையா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா். ஆடி அமாவாசையையொட்டி உடுமலையில் உள்ள மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், போடிபட்டி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.