பல்லடத்தில் ஆடு திருடியவா் கைது

பல்லடம் அருகே உள்ள பருவாயில் ஆடு திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பல்லடம் அருகே உள்ள பருவாயில் ஆடு திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரான்சிஸ். இவா் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா் தனது கடை முன்பு ஆட்டுக்குட்டியை கட்டி வைத்திருந்தாா். கடைக்கு பொருள் வாங்குவதுபோல வந்த ஒருவா் பிரான்சிஸ் கடைக்குள் வேலையாக இருந்தபோது ஆட்டுக்குட்டியை இருசக்கர வாகனத்தில் வைத்து திருடிச் சென்றாா்.

இதனைப் பாா்த்த பிரான்சிஸ் மற்றும் அருகிலிருந்தவா்கள் அந்த நபரை துரத்திச் சென்று பிடித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், ஆடு திருடியவா் கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த ராமசாமி மகன் பிரகாஷ் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com