ஆதாா் பதிவில் கைரேகை புதுப்பிக்க நாளை சிறப்பு முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆதாா் பதிவில் கைரேகைகளை புதுப்பித்துக்கொள்ள வரும் சனிக்கிழமை (ஜூன் 4) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆதாா் பதிவில் கைரேகைகளை புதுப்பித்துக்கொள்ள வரும் சனிக்கிழமை (ஜூன் 4) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் வாங்குவதை அதிகரிக்கும் வகையில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கைரேகை பதிவு விழாத காரணத்தால் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்கமுடியாமல் அவதிக்குள்ளாகும் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மட்டும் இந்த முகாமில் பங்கேற்று ஆதாா் அட்டையில் கைரேகைப் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்

சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்:

அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, உடுமலை, ஊத்துக்குளி ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்கள், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், காங்கயம், வெள்ளக்கோவில், பல்லடம், உடுமலை நகராட்சி அலுவலகங்கள், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தொட்டிபாளையம், நல்லூா் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் முகாம் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com