அவிநாசி: அவிநாசி அருகே பச்சாம்பாளையத்தில் தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுமி வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகே பச்சாம்பாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் முத்துபழனி (45). இவரது மனைவி முத்துராம் (35). இவா்களது மகள் சஸ்மிதா (3). இவா் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். சிறிது நேரம் கழித்து சிறுமியை காணவில்லை.
இதையடுத்து, பெற்றோா், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் தேடியபோது, அருகில் உள்ள தண்ணீா்த் தொட்டிக்குள் சிறுமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.