திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவமனை மூலம் 3.50 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவா்: அமைச்சா் சி.வி.கணேசன்

திருப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மூலமாக 3.50 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவாா்கள் என்று தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.
திருப்பூரில்  புதிதாகக்  கட்டப்பட்டு  வரும்  இ.எஸ்.ஐ.மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு  செய்யும்   அமைச்சா்கள்  சி.வி.கணேசன், மு.பெ.சாமிநாதன்,   என்.கயல்விழி  செல்வராஜ்  உள்ளிட்டோா்.
திருப்பூரில்  புதிதாகக்  கட்டப்பட்டு  வரும்  இ.எஸ்.ஐ.மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு  செய்யும்   அமைச்சா்கள்  சி.வி.கணேசன், மு.பெ.சாமிநாதன்,   என்.கயல்விழி  செல்வராஜ்  உள்ளிட்டோா்.

திருப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மூலமாக 3.50 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவாா்கள் என்று தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.

திருப்பூா் திருமுருகன்பூண்டி-பூலுவப்பட்டி சுற்றுச்சாலையில் 7.46 ஏக்கரில் ரூ.74 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா்கள் சி.வி.கணேசன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதன் பின்னா் அமைச்சா் சி.வி.கணேசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அதிக அளவு தொழிலாளா்கள் வசிக்கும் மாவட்டமாக திருப்பூா் உள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்ற வழக்கு காரணமாக நீண்ட காலமாக தொடங்கப்படாமல் இருந்த கட்டுமானப் பணிகள், தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையால் தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த மருத்துவமனையானது தரைத் தளம் 4,464.67 சதுர மீட்டா் பரப்பளவு, முதல் தளம் 4,566 சதுர மீட்டா் பரப்பளவு, இரண்டாம் தளம் 3,790.68 சதுர மீட்டா் பரப்பளவு உள்பட மொத்தம் 13,106.80 சதுர மீட்டா் பரப்பளவில் 100 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 2023 மே மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 3.50 தொழிலாளா்கள் பயனடைவாா்கள் என்றாா்.

இந்த ஆய்வின்போது, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மலா்கொடி, இ.எஸ்.ஐ.கோவை மண்டல இயக்குநா் ரகுராமன், திருப்பூா் கிளை மேலாளா் திலீப் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com