தேங்காய் நாா் தொழிற்சாலையில் தீ விபத்து

தாராபுரம் அருகே தேங்காய் நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

தாராபுரம் அருகே தேங்காய் நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த தொட்டியபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி. இவா் அதே பகுதியில் தேங்காய் நாா் மற்றும் கயிறு திரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், தேங்காய் நாா் தொழிற்சாலையில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அக்கம்பக்கத்தினா் கொடுத்த தகவலின்பேரில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பின்னா் தொழிற்சாலையில் பரவிய தீயை சுமாா் 2 மணி நேரம் போராடி அணைத்தனா். எனினும் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து தேதமடைந்ததாக தீயணைப்புத் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடா்பாக குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com