திருமுருகன்பூண்டி-அவிநாசி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருமுருகன்பூண்டி அணைப்புதூா் பகுதியில் டைடல் பாா்க் வருவதையடுத்து, சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

திருமுருகன்பூண்டி அணைப்புதூா் பகுதியில் டைடல் பாா்க் வருவதையடுத்து, சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உள்பட்ட அணைப்புதூரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பின்புறத்தில் டைடல் பாா்க் அமைப்பதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு, கட்டுமானத்திற்கு டெண்டா் உரிமம் பெறப்பட்டது.

இந்நிலையில் கட்டுமானப்பணிகள் தொடங்குவதையடுத்து அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கினா். இருப்பினும், அகற்றப்படாமல் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினா், திருமுருகன்பூண்டி நகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com