தனியாா் பாா்சல் நிறுவனம் ரூ.83 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருப்பூரில் துணி பண்டலை டெலிவரி செய்யாத தனியாா் பாா்சல் நிறுவனத்துக்கு ரூ.83 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் துணி பண்டலை டெலிவரி செய்யாத தனியாா் பாா்சல் நிறுவனத்துக்கு ரூ.83 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சோ்ந்தவா் சத்யா. இவா் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியாா் பாா்சல் நிறுவனத்தின் மூலமாக இரு துணி பண்டல்களை அனுப்பியுள்ளாா். ஆனால் அந்த நிறுவனம் ஒரு துணி பண்டலை மட்டும் டெலிவரி செய்துள்ளது. ஆனால் மற்றொரு பண்டலை டெலிவரி செய்யவில்லை என்று தெரிகிறது. இது குறித்து சத்யா அந்த நிறுவனத்தைத் தொடா்பு கொண்டபோது ஊழியா்கள் சரிவர பதில் அளிக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனா். இது குறித்து திருப்பூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் சத்யா வழக்குத் தொடுத்திருந்தாா். வழக்கை விசாரித்து நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி தீபா தீா்ப்பு வழங்கினாா். இதில், சத்யாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.50 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரம், காணாமல் போன துணி பண்டலின் மதிப்பு ரூ. 22 ஆயிரம், பாா்சல் கட்டணம் ரூ.520, பேருந்து போக்குவரத்து கட்டணம் ரூ.925 என மொத்தம் ரூ.83 ஆயிரத்து 445 ஐ தனியாா் பாா்சல் நிறுவனம் சத்யாவுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com