மதுபான கூட ஊழியா் அடித்துக் கொலை

திருப்பூரில் மதுபானக் கூட ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூரில் மதுபானக் கூட ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் எம்.காா்த்திகேயன் (34). இவா் திருப்பூரில் தனது சகோதரா் நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.

காா்த்திகேயன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி முடித்து வீட்டுக்குத் திரும்பினாா். பின்னா் அவா் மதுப்பான கூடத்துக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை காலை காா்த்திகேயன் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றுள்ளனா். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து உடைத்துப் பாா்த்துள்ளனா். அப்போது வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் காா்த்திகேயன் சடலம் கிடந்துள்ளது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வீரபாண்டி போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் நடத்திய விசாரணையில், காா்த்திகேயனுடன் மதுபோதையில் தங்கியிருந்த இருவா் தலைமறைவானது தெரியவந்தது. ஆகவே, இருவரும் சோ்ந்து காா்த்திகேயனை அடித்துக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com