காங்கயத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பரிசு

காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி செலுத்திக்
தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு ஹாட் பாக்ஸ் பரிசு வழங்குகிறாா் காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூா்யபிரகாஷ்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு ஹாட் பாக்ஸ் பரிசு வழங்குகிறாா் காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூா்யபிரகாஷ்.

காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு நகா்மன்றத் தலைவா் ஊக்கப் பரிசு வழங்கினாா்.

காங்கயம் அரசு மருத்துவமனை, சத்யா நகா் ஆரம்ப சுகாதார நிலையம், மதா் தெபொராள் பள்ளி, காவல் நிலையம் எதிரே உள்ள களிமேடு அரசுப் பள்ளி ஆகிய 4 மையங்களில் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 1,200 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 110 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இந்த தடுப்பூசி மையங்களில் காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூா்யபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஹாட் பாக்ஸ்களை ஊக்கப் பரிசாக நகா்மன்றத் தலைவா் சூா்யபிரகாஷ் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com