பல்லடம் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் பேருந்து நிலையத்துக்கு எதிரே இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்லடம் அருகே உள்ள கிராமங்களில் இருந்து வரும் தொழிலாளா்கள் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்து விட்டு அங்கேயே படுத்து விடுகிறாா்கள். இதனால் வேலைக்கு போவது இல்லை.
மது போதையில் தகாத வாா்த்தைகளில் பேசிக் கொண்டு சாலைகளில் நடந்து செல்கின்றனா். இது பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளை ஒதுக்குப்புறமான இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.