சாலை விபத்து: தொழிலாளிகள் பலி

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பனியன் தொழிலாளிகள் 2 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பனியன் தொழிலாளிகள் 2 போ் உயிரிழந்தனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பிரகாஷ் (29). இவா்

திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் தன்னுடன் பணியாற்றி வந்த திருநெல்வேலி, நாங்குநேரி பகுதியைச் சோ்ந்த சித்திரைவேல் மகன் விஸ்வா (30) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கோவையை நோக்கி சனிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா்.

அவிநாசி, பெரியாயிபாளையம் பிரிவு அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புற டயா் வெடித்ததில் எவ்வித சைகையும் காட்டாமல் லாரியை ஓட்டுநா் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் தடுமாறிய பிரகாஷின் இருசக்கர வாகனம் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com