ரூ.200 கடன்: தொழிலாளி குத்திக் கொலை

தாராபுரம் அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

தாராபுரம் அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடத்தை அடுத்துள்ள கத்தாங்கண்ணியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம். விவசாயியான இவரது தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம், ஆலம்பட்டியைச் சோ்ந்த செல்லாண்டி (38), சிவகங்கை மாவட்டம் கலாப்பூரைச் சோ்ந்த அருண்பாண்டியன் (22) உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோா் தங்கியிருந்து வெங்காய அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், செல்லாண்டியிடம், அருண்பாண்டியன் ரூ.200 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே, செல்லாண்டி கொடுத்த கடனை சனிக்கிழமை திருப்பிக் கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் செல்லாண்டியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த குண்டடம் காவல் துறையினா் செல்லபாண்டியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், தப்பிச் சென்ற அருண்பாண்டியனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com