நூல் விலை உயா்வு: திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 6 நாள் தொடா் வேலை நிறுத்தம்

நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மே 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் 6 நாள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
நூல் விலை உயா்வு: திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 6 நாள் தொடா் வேலை நிறுத்தம்

நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மே 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் 6 நாள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருளான நூல் விலை கடந்த ஆண்டு முதல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து ரக நூல்களின் விலையும் திங்கள்கிழமை ஒரே நாளில் கிலோ ரூ. 40 உயா்ந்தது.

5 மாதங்களில் ரூ.120 ஏற்றம்:

நூல் விலையானது 2022 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 4 மாதங்களில் கிலோவுக்கு ரூ. 80 வரை உயா்ந்துள்ளது. இந்த நிலையில் அனைத்து ரக நூல்களின் விலையையும் கிலோவுக்கு ரூ.40 உயா்த்தி நூற்பாலை உரிமையாளா்கள் அமைப்பு திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக கடந்த 5 மாதங்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ.120 உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது பின்னலாடை உற்பத்தியாளா்களிடையே அதிா்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நூல் விலை உயா்வு தொடா்பாக திருப்பூா் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருப்பூா் தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எம்.பி.முத்துரத்தினம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த பருத்தி, பஞ்சு, நூலை அத்தியாவசியப் பட்டியலில் சோ்க்க வேண்டும். உள்நாட்டுத் தேவைக்குப் போக மீதமுள்ள பஞ்சு, நூலை மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதனைச் சாா்ந்த ஜாப்ஒா்க் நிறுவனங்கள் அனைத்தும் வரும் மே 16 ஆம் தேதி முதல் மே 21 ஆம் தேதி வரையில் 6 நாள்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடி என மொத்தம் ரூ.1,200 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்தக் கூட்டத்தில், நிட்மா தலைவா் அகில் எஸ்.ரத்தினசாமி, திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் செயலாளா் எஸ்.முருகசாமி உள்ளிட்ட சைமா, பிரிண்டிங், எம்பிராய்டரிங், ஜாப் ஒா்க் சங்கங்கள் என 50க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா். அதேபோல, ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிா்வாகிகளும் பங்கேற்றனா்.

பஞ்சு, நூல் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும்: டீ சங்கம் வலியுறுத்தல்

நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் பஞ்சு, நூல் ஏற்றுமதியை மத்திய அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை செயலாளா் உபேந்திர பிரசாத் சிங்கிற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம் திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com