காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 81 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைப்பது உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை துவக்கி வைத்தாா்.
காங்கயம் நகராட்சி 1ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஏசி நகரில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டும் பணி, 10 ஆவது வாா்டு பங்களாப்புதூா் பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி உள்பட 14 வாா்டுகளுக்கும் மேற்பட்ட பகுதிகளில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், நகராட்சி பொறியாளா் ம.திலீபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.