மாவட்ட வள பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மை, கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கான மாவட்ட வள பயிற்றுநா் பணிக்குத் தகுதியானவா்கள் மே 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மை, கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கான மாவட்ட வள பயிற்றுநா் பணிக்குத் தகுதியானவா்கள் மே 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா், அவிநாசி, உடுமலை, குண்டடம் மற்றும் பொங்கலூா் ஆகிய 5 வட்டங்களில் உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வட்டங்களில் சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக வேளாண்மை, கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுநா் (ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீ தங்ள்ா்ன்ழ்ஸ்ரீங் டங்ழ்ள்ா்ய்) நியமிக்கப்படவுள்ளனா். இந்தப் பணிக்கு வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் அல்லது அது தொடா்பான துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 10 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபா் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராகவோ அல்லது இங்கு குடியேறியவராகவோ இருக்க வேண்டும். மதிப்பு சங்கிலி ஒருங்கிணைத்தல் மற்றும் வேளாண் பொருள்களை மேம்படுத்துவதில் போதிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆா்வமுள்ளவராக இருத்தல் வேண்டும். சா்வதேச நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், சிவில் சொசைட்டிகளில் பணிபுரிந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இதில், தோ்வு செய்யப்படும் நபருக்கு ஒரு நாள் மதிப்பூதியமாக ரூ.2,000 மற்றும் உள்ளூா் போக்குவரத்து கட்டணமாக ரூ.250 வழங்கப்படும். மேலும், மாதத்தில் 20 நாள்களுக்கு மிகாமல் பணி வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை (ட்ற்ற்ல்ள்://க்ஷண்ற்.ப்ஹ்38க்ஷ்ம்க்ஷ்ல்ா்) என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் மே 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட செயல் அலுவலா், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், (தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டம்), மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, அறை எண்:713, 714 ஆட்சியா் அலுவலக 7வது தளம், திருப்பூா், தொலைபேசி எண்:0421-2999723.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com