திருப்பூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளா் பணியிடத்துக்கான நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளா் பணியிடம் டுநஎநட-1 (ரூ.15,700-50,000) எனும் ஊதிய விகிதத்தில் பூா்த்தி செய்வதற்கான நோ்காணல் மே 9ஆம் தேதி நடைபெறும் என விண்ணப்பதாரா்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்த நோ்காணல் நிா்வாக காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே அழைக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு நோ்காணல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.