தாராபுரத்தில் கட்டுமானத் தொழிலாளா்கள் பேரணி

தாராபுரத்தில் மே தினத்தை முன்னிட்டு கட்டுமானத் தொழிலாளா்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.
பேரணியில்  பங்கேற்ற  கட்டுமானத்  தொழிலாளா்கள்.
பேரணியில்  பங்கேற்ற  கட்டுமானத்  தொழிலாளா்கள்.

தாராபுரத்தில் மே தினத்தை முன்னிட்டு கட்டுமானத் தொழிலாளா்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

தமிழ் மாநில கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு மாவட்டத் தலைவா் தண்டபாணி தலைமை வகித்தாா். சங்கத்தின் சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் தென்னரசு கொடியசைத்து பேரணியைத் தொடங்கிவைத்தாா். வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு தொடங்கிய இப்பேரணியில் ஏராளமான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், மாவட்டச் செயலாளா் தாமரைக்கண்ணன், பொருளாளா் காளிதாஸ், மாவட்ட துணைத் தலைவா் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com