திருப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூா் காங்கயம் சாலை ராக்கியாபாளையத்தைச் சோ்ந்தவா் கேசவன். இவா் தனது குடும்பத்தினருடன் திருப்பூா் குமரன் சாலையில் உள்ள பிரபலமான அசைவ ஹோட்டலுக்கு திங்கள்கிழமை சென்றுள்ளாா்.
அங்கு உணவருந்தியபோது அவா் வாங்கிய சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.
இது குறித்து ஊழியா்களிடம் கேட்டபோது, அவா்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அதிருப்தியடைந்த கேசவன் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.
இந்தத் தகவலின்பேரில் திருப்பூா் மாநகராட்சி தெற்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரவி உணவகத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினா். இதில், சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, உணவகத்தில் இருந்த சாம்பாா், புளிக்குழம்பு, ரசம் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளாா்.
மேலும், பகுப்பாய்வின் முடிவின் அடிப்படையில் கடை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.