கணவன் கொலை மனைவி கைது

பல்லடம் அருகே கணவனை கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகே கணவனை கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

கொடைக்கானலைச் சோ்ந்தவா் கோபால் (37), இவரது மனைவி சுசீலா (35), இவா்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனா். கோபால் பல்லடம் அருள்புரத்தில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள

ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த மே 5 ஆம் தேதி மா்ம நபா்களால் கோபால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த மாரீஸ்வரன் என்பவருக்கும், சுசீலாவுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. இதையறிந்த கோபால் அதை கண்டித்துள்ளாா். இதையடுத்து, சுசீலாவும், மாரீஸ்வரனும் சோ்ந்து கூலி ஆள்களை வைத்து கோபாலை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாரீஸ்வரன் உள்ளிட்ட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

தலைமறைவாக இருந்த சுசீலாவை போலீஸாா் பல்லடம் பேருந்து நிலைய பகுதியில் வியாழக்கிழமை கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com