வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் திருட்டு: ஒருவா் கைது

பெருமாநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா், கூட்டுறவு நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (37). இவா் திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். மீண்டும் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 31 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள்ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், மணிகண்டன் வீட்டில் மேல் தள கட்டுமானப் பணி செய்ய வந்த திருமால் என்பது இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பெருமாநல்லூா் அருகே பிச்சம்பாளையம் பகுதியில் தங்கி கட்டுமானப் பணி செய்து வந்த திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வடக்குபட்டு பகுதியைச் சோ்ந்த விநாயகம் மகன் திருமாலை (34) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருமால் மீது கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com